திங்கள், 26 மார்ச், 2012

மாதாந்திர கூட்டம்-18/3/2012

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் மார்ச் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீபா Adv.பீர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கி கிராஅத் ஒதினார்.
---------------------------------------------------


தலைமை உரையாக கலிபா Adv.M.பீர் முஹம்மது அவர்கள் குத்துபுமார்கள் ஒரு மனிதனின் தக்தீரை மாற்றியமைக்கும் அல்லது ஒத்தி போடும் வல்லமை உசையவர்கள் என்று உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------------------

Er.N.அப்துல் ஜலில் ஹக்கியுல் காதிரி அவர்கள் தஹஜ்ஜத்தின் அகமியம் என்னவென்றால் மனோ இச்சையையும்,உலக ஆசையையும்,தூங்க வைத்து இறைவனோடு மனம் கலப்பதே (தஹஜ்ஜத்) ஆகும் என்று உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------------
திவான் அப்துல் காதர் ஹக்கியுல் காதிரி அவர்கள் ரசூல் (ஸல்) அவர்கள் மீது அதிகம் அதிகமாக அன்பு செலுத்தச் செய்திருப்பது,எம் முரீதுகளிடம் நாம் செய்திருக்கும் முக்கியமான மாற்றம் என சங்கைமிகு ஷெய்கு நாயகம் அறிவித்திருக்கிறார்கள் என்று உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------------------------

S.B.ஆசிப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஏகாந்த பாடல் பாடினார்.
--------------------------------------------------------------------------------------------------
P.அமிர் அலி ஹக்கியுல் காதிரி அவர்கள் இறையைப் பற்றி அறியாமை,அறிதல்,தெரிதல்,புரிதல்,உணர்ச்சி நிலை (உணர்ந்து இறையிலே கலந்த நிலை) என்று உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------
 செய்யது அப்துல் மஜீது ஹக்கியுல் காதிரி அவர்கள் ரசூலுள்ளாஹ்வின் அருமையை மற்றவர்கள் தெரிந்த அளவு கூட நாம் அறியாமல் இருக்கிறோம்.ரஸூலியத்தின் தாற்பறியத்தை நமது ஷெய்கு நாயகத்தின் அறிவுரைகள் மூலமாக அதிகமாக தெரிந்து கொள்ளலாம் என்று உரையாற்றினார்.
-----------------------------------------------------

Adv.மிர்ஜவ்வாது ஹக்கியுல் காதிரி அவர்கள் தஸவு என்ற ஞான அறிவு குருவின் முலமே கிடைக்கும் குருவை கைபிடித்தலே இம்மைக்கும் மறுமைக்கும் உறுதியான வாழ்வு என்று உரையாற்றினார்.

தெளபா பைத்து ஒதி அஸர் தொழுகைக்குப்பின் தப்ருக் வழங்கி கூட்டம் இனிதே நிறைவடைந்தது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக