ஞாயிறு, 28 நவம்பர், 2010

புனித இராத்திபு நிகழ்ச்சி 21-11-2010





சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் திவான் அப்துல் காதர் அவர்கள் வீட்டில் பிறை 14லில் இராத்திபு நிகழ்ச்சி நடந்தது. நவம்பர் மாதம் 21ம் தேதி ஞாயற்றுக்கிழமை திங்கள் இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.

சனி, 27 நவம்பர், 2010

சென்னை மாதாந்திர கூட்டம் 14-11-2010

சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் நவம்பர் மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் தலைமை தாங்கினார்.முதலவதாக மௌலவி பக்கிர் முகம்மது ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.அதற்குபின் கலீபா.Adv.பீர் முஹம்மது அவர்களால் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.

-------------------------------------------------------------------------------------


கலீபா Adv.A.அப்துல் ரவூப் அவர்கள் நபி இப்ராஹீம் (அலை)வஸல்லம் அவர்களின் தியாகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.


-----------------------------------------------------------------------------------------------



P.ஹாஜா முஹையதீன் அவர்கள் உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது,நம் தரீக்காவின் உயர்வு என்ற தலைப்பில் உரையாற்றினார்.

-------------------------------------------------------------------------------------------------



O.M.C.ஜிலானி அவர்கள் நபி இப்ராஹீம் (அலை)வஸல்லம்,முஹையத்தீன் ஆண்டகை,நமது ஷெய்கு நாயகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------
மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் அவர்கள் ஷெய்கு நாயகத்தின் அமுத மொழிகள் அனைத்தும் குர்ஆன்,ஹதிகளுக்கு மிகவும் பொருத்தமானவை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------
Er.ஹைதர் நிஜாம் அவர்கள் நமது மதரஸாவின் வளர்ச்சி,விரிவாக்கம்,ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------------
முஹம்மது ராவுத்தர் அவர்கள் தியாகம் என்பது எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்வது என்ற தலைப்பில் உரையாற்றினார்.
---------------------------------------------------------------------------------------------

கலந்து கொண்ட முரீதுகள்


தவ்பா பைத் ஓதி,அஸர் தொழுகையுடன் தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.

ஞாயிறு, 7 நவம்பர், 2010

புனித விசால்தின நிகழ்ச்சி - 2010

குத்துபுல் திலகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஷூசைனிய்யுல் ஹாஷிமிய்(ரலி) அவர்களின் 46 வது வருட விசால் கந்தூரிதினம் 25-10-2010 திங்கள்கிழமை மாலை செவ்வாய்கிழமை இரவு சங்கை மிகு மசூது மெளலானா தலைமையில் மிக சிறப்பாக நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில் உள்ள திருமுல்லைவாசலில் நடைப்பெற்றது.




மெளலிது, ராத்திபு, துவாவுடன் இன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது...அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது... பல ஊர்களிலிருந்தும் புனித கந்தூரிவிழாவில் அதிகமான முரீதுகளும் பக்தர்களும் கலந்து மௌலானா நாயகம் (ரலி) அவர்களின் அருளையும் ஆசியையும் பெற்று ஈருலக நற்பேருகளையும் அடைந்துக்கொள்ளவதற்கு பலரும் இந்த வைபவத்தில் கலந்து சிறப்பித்தார்கள்.