புதன், 19 மார்ச், 2014

புனித இராத்திபு நிகழ்ச்சி




 

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் கலிபா Adv.A.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி1435 ஜமாத்துல் அவ்வல் மாதம் பிறை 14ல் (மார்ச் மாதம் 16ல் தேதி ஞாயிறு பின்னேரம் திங்கள் இரவு) மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா ஒதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.

மாதந்திர கூட்டம் - 16-03-2014

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் மாதந்திர கூட்டம் 16-03-2014 அன்று நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு கலீபா Adv.A.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு சிறப்பு பேச்சாளாராக தமிழகத்தில் புகழ்பெற்ற ஹஜரத் சேக் அப்துல்லா ஜமாலி அவர்கள் நபிகள் நாயகத்தின் உயர்வு,மகத்துவம்,இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள்,பெண்களுக்கான இஸ்லாமிய சட்டங்கள்,அவ்லியாக்கள்,வலிமார்கள்,குத்துபுமார்களின் உயர்வு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.கூட்டத்தின் இறுதியாக துஆவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.








திருமுல்லைவாசல் தர்காவின் ஆர்ச்

சீர்காழி அடுத்துள்ள திருமுல்லைவாசல் தர்காவில் ஆர்ச் வேலை இப்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது