திங்கள், 26 மார்ச், 2012

கந்தூரி ஜியாரத் விழா நாள் 25-03-2012

















சம்பைப்பட்டினத்தில் ஞானமகான் வலிய்யுல் அக்பர் செய்யிதினா ஜமாலிய்யா செய்யிது முஹம்மது மௌலானா (ரலி) அவர்களின் புனித கந்தூரி ஜியாரத் விழா மிகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் சங்கைமிகு சைய்யது மஸ்ஊது மெளலானா அல்ஹாதி அவர்களின் முன்னிலையில் மெளலிது,புனித ராத்திபு மஜ்லிஸ் நடைபெற்றது.இவ்விழாவில் கலீபாக்கள்,முரீதீன்கள்,அஹ்பாபுகள் கலந்து சிறப்பித்தார்கள்.இவ்விழாவிற்க்குப்பின் தப்ருக்,கந்தூரி உணவு வழங்கப்பட்டது. 


மாதாந்திர கூட்டம்-18/3/2012

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் மார்ச் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீபா Adv.பீர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கி கிராஅத் ஒதினார்.
---------------------------------------------------


தலைமை உரையாக கலிபா Adv.M.பீர் முஹம்மது அவர்கள் குத்துபுமார்கள் ஒரு மனிதனின் தக்தீரை மாற்றியமைக்கும் அல்லது ஒத்தி போடும் வல்லமை உசையவர்கள் என்று உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------------------

Er.N.அப்துல் ஜலில் ஹக்கியுல் காதிரி அவர்கள் தஹஜ்ஜத்தின் அகமியம் என்னவென்றால் மனோ இச்சையையும்,உலக ஆசையையும்,தூங்க வைத்து இறைவனோடு மனம் கலப்பதே (தஹஜ்ஜத்) ஆகும் என்று உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------------
திவான் அப்துல் காதர் ஹக்கியுல் காதிரி அவர்கள் ரசூல் (ஸல்) அவர்கள் மீது அதிகம் அதிகமாக அன்பு செலுத்தச் செய்திருப்பது,எம் முரீதுகளிடம் நாம் செய்திருக்கும் முக்கியமான மாற்றம் என சங்கைமிகு ஷெய்கு நாயகம் அறிவித்திருக்கிறார்கள் என்று உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------------------------

S.B.ஆசிப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஏகாந்த பாடல் பாடினார்.
--------------------------------------------------------------------------------------------------
P.அமிர் அலி ஹக்கியுல் காதிரி அவர்கள் இறையைப் பற்றி அறியாமை,அறிதல்,தெரிதல்,புரிதல்,உணர்ச்சி நிலை (உணர்ந்து இறையிலே கலந்த நிலை) என்று உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------
 செய்யது அப்துல் மஜீது ஹக்கியுல் காதிரி அவர்கள் ரசூலுள்ளாஹ்வின் அருமையை மற்றவர்கள் தெரிந்த அளவு கூட நாம் அறியாமல் இருக்கிறோம்.ரஸூலியத்தின் தாற்பறியத்தை நமது ஷெய்கு நாயகத்தின் அறிவுரைகள் மூலமாக அதிகமாக தெரிந்து கொள்ளலாம் என்று உரையாற்றினார்.
-----------------------------------------------------

Adv.மிர்ஜவ்வாது ஹக்கியுல் காதிரி அவர்கள் தஸவு என்ற ஞான அறிவு குருவின் முலமே கிடைக்கும் குருவை கைபிடித்தலே இம்மைக்கும் மறுமைக்கும் உறுதியான வாழ்வு என்று உரையாற்றினார்.

தெளபா பைத்து ஒதி அஸர் தொழுகைக்குப்பின் தப்ருக் வழங்கி கூட்டம் இனிதே நிறைவடைந்தது



வெள்ளி, 23 மார்ச், 2012

புனித இராத்திபு நிகழ்ச்சி -08/03/2012





சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் O.M.C.ஜீலானி ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில் சங்கை மிகு யாசீன் அலி மெளலானா,சாமிஸ் மெளலானா அவர்களின் முன்னிலையில் ஹிஜ்ரி 1433 ரபீஉல் ஆகிர் மாதம் பிறை 14ல் புனித இராத்திபு நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் கலிபாக்களும் ஆத்ம சகோதர்ர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்க்குப் பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்தச்சி நிறைவேறியது.




முஹிய்யித்தீன் ஆண்டகை (ரலி) அவர்களின் மெளலூது





சங்கை மிகு அப்துல் காதர் ஜீலானி (ரலி) அவர்களின் புனித மாதமான ரபீஉல் ஆகிர் பிறை 11ல் 04/03/2011 அன்று சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக புனித மெளலூது ஓதப்பட்டது.இதில் சங்கை மிகு யாசின் அலி மெளலானா,சாமிஸ் மெளலானா மற்றும் கலிபாக்களும் ஆத்ம சகோதர்ர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்க்குப் பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்தச்சி நிறைவேறியது.