திங்கள், 30 நவம்பர், 2015

மாதாந்திர கூட்டம்

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பில் மாதாந்திர கூட்டம் 22.11.2015 அன்று நடைபெற்றது. கூட்டத்தை சென்னை சபையின் செயலாலர் ஹாஜா முஹையத்தீன் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் தலைமை வகித்து நடத்திவைதார்கள். கூட்டத்தின் ஆரம்பமாக ஆலிம் பக்கிர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் கிராஅத் ஒதினார்கள். அதன் பிறகு Er.ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் ஏகாந்த கீதம் பாடினார்கள். தொடர்ந்து ஆத்ம சகோதரர்கள் உறையாற்றினர்கள்.

P. ஹாஜா முஹையத்தீன் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் குருவில் பனா என்ற தலைப்பிலும்,

Er.ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் கடமையை செய் - பலன் தானாக வரும். முயற்ச்சியே நம்மை வெற்றியடைய செய்யும் என்ற தலைப்பிலும்,

மௌலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் அஹ்லுல் பைத்துகளை நாம் பின்பற்ற வேண்டும். நமது சங்கை மிகு ஷெய்கு நாயகம் அவர்கள் ரசூல் சல்லல்லாகு அலைஹி வசல்லம் அவர்களின் வாரிசே (அஹ்லுல் பைத்)  என்ற தலைப்பிலும்,

K. ஜெய்னுல்ஹக் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் தொடங்குங்கள் முடிந்துவிடும் என்ற தலைப்பிலும்,

P. அமீர் அலி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் ஞானம் பயில ஞான குரு மிக முக்கியம் என்ற தலைப்பிலும்,

அப்துல் பாசித் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் அல்லாஹவை அறிந்து நடக்க வேண்டும் அல்லாஹவை அறிவது மிக முக்கியம்  என்ற தலைப்பிலும் உறையாற்றினார்கள்.









நிகழ்சியின் இறுதியாக தவ்பா பைத் ஒதி அஸர் தொழுகைக்கு பின் தப்ருக் உடன் கூட்டம் இனிதே நிறையுற்றது.