சனி, 23 அக்டோபர், 2010

புனித இராத்திபு நிகழ்ச்சி 21-10-2010





சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் I.முஹம்மது சலாவுதீன் வீட்டில் பிறை 14லில் இராத்திபு நிகழ்ச்சி நடந்தது. அக்டோபர் மாதம் 21ம் தேதி வியாழக்கிழமை வெள்ளி இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.

சென்னை மாதாந்திர கூட்டம் 17-10-2010

சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் தலைமை தாங்கினார்.முதலவதாக மௌலவி பக்கிர் முகம்மது ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.அதற்குபின் Er.ஹைதர் நிஜாம் அவர்களால் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.
-----------------------------------------------------------------------------------------

கலிபா Adv. அப்துல் ரவூப் அவர்கள் ஜிவாத்மா,பரமாத்மா,ஹக்கை மறைக்கும் திரை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------------------


Dr.Prof.குலாம் முஹம்மதுஅவர்கள் தன்னுள்ளும் இறை உள்ளது என்பதை உணர வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------------

Er.முஹைதீன் அப்துல் காதர் அவர்கள்
பன்னாமம் பூண்டாலும் பரமாவதொன்று
தன்நாம்ம துறந்தாலும் பரமா வதொன்று
இதன் விளக்கமளித்து உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------------------

திவான் அப்துல் காதர் அவர்கள் குருவை கரம் பிடித்ததால் நாம் நிச்சயம் கரை சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கை உறுதியாக இருக்க வேண்டும் என்று உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------------

அப்துல் ஜலில் அவர்கள் ரசூலுள்ளாஹ்வின் உயர்வு,பெரிய நாயகத்தின் உயர்வு பற்றி உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------------------
கலந்து கொண்ட முரீதுகள்


செவ்வாய், 5 அக்டோபர், 2010

எழில்மிகு 75வது உதயதினவிழா

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக சங்கைமிகு செய்கு நாயகம் குத்புஸ்ஸமான் ஷம்ஸூல் வுஜூத் ஜமாலிய்யா அஸ்ஸைய்யித் கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் 75ஆவது உதயதின விழா

அக்டோபர் மாதம் 03-10-2010 9.30 மணியளவில் விழா ஆரம்பமானது.

இவ்விழாவிற்க்கு மூத்த ஆத்ம சகோதரர் Dr.Er.முஹைதீன் அவர்கள் தலைமை தாங்கினார்.

முதலாவதாக ஆலிம் A.பக்கிர் முஹம்மது கிராஅத் ஒதினார்.


கஸிதத்துல் அஹ்மதிய்யா,கஸிதத்துல் அவ்னிய்யா

ஒதும் நிகழ்ச்சி

Dr.Prof.M.குலாம் முஹம்மது ஹக்கியுல் காதிரி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

கலீபா Adv.M.பீர் முஹம்மது ஹக்கியுல் காதிரி அவர்கள் வஹ்தத்துல் வுஜூது பாடல் பாடினார்.

சங்கைமிகு செய்கு நாயகத்தின் 75ஆவது உதயதின விழாவை முன்னிட்டு நிதி உதவி ஆத்ம சகோதரர் ஆயத்துல்லா ஹக்கியுல் காதிரி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சிவகாசி தலைமை ஆசிரியர் (ஒய்வு) ஆத்ம சகோதரர் மக்தும் ஜான் ஹக்கியுல் காதிரி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

கலீபா Adv.A.அப்துல் ரவூப் ஹக்கியுல் காதிரி அவர்களால் ஷெய்கு நாயகத்தின் மீது இனிய பாடல் பாடினார்.

கொச்சின் பஷீர் அஹமது ஹக்கியுல் காதிரி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

S.B.ஆசிப் ஹக்கியுல் காதிரி அவர்கள் ஏகாந்த பாடல் பாடினார்.

மதுக்கூர் கலீபா அஹமது முஸ்தபா ஹக்கியுல் காதிரி அவர்கள் சிறப்புரையாற்றினார்.பின் ஷெய்கு நாயகத்தின் மீது இனிய பாடல் பாடினார்.

ஆத்ம சகோதரர் ஆயத்துல்லா ஹக்கியுல் காதிரி அவர்கள் ஷெய்கு நாயகத்தின் மீது இனிய பாடல் பாடினார்.

ஆத்ம சகோதரர் Er.N.அப்துல் ஜலீல் ஹக்கியுல் காதிரி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட முரீதுகளின் ஒரு பகுதி

மதுக்கூர் கலீபா முஹம்மது காலித் ஷா ஹக்கியுல் காதிரி அவர்கள்
சிறப்புரையாற்றினார்.

Adv.ஆத்ம சகோதரர் மீர் ஜாவீத் ஹக்கியுல் காதிரி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட முரீதுகளின் ஒரு பகுதி

கூட்டத்தில் கலந்து கொண்ட முரீதுகளின் ஒரு பகுதி

விழா குழுவினர்

மதிய உணவு ஏற்பாடு

விருந்து நிகழ்ச்சி

துஆவுக்கு பின் லுஹர் தொழுகை நடை பெற்றது.பின் மதிய உணவுக்கு பின் தப்ரூக் வழங்கி விழா இனிதே நிறைவேறியது.


வெள்ளி, 1 அக்டோபர், 2010

திருச்சியில் 75வது உதயதினவிழா










திருச்சி மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமீஆ யாசீன் அறபுக்கல்லூரியில் சங்கைமிகு செய்கு நாயகம் குத்புஸ்ஸமான் ஷம்ஸ்_ல் வுஜூத் ஜமாலிய்யா அஸ்ஸைய்யித் கலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் 75வது உதயதின விழா 25.09.2010 சனிக்கிழமை காலையில் 9.30 மணிக்கு மிக சிறப்புடன் நடைப்பெற்றது.

இவ்விழாவிற்கு கண்ணியமிக்க மசூது மௌலானா அவர்கள் தலைமைத் தாங்கினார்கள்.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக திருச்சி மதரஸா மாணவர் கிராஅத் ஓதி துவங்கினார்கள்.
அவர்களைத் தொடந்து வஹ்தத்துல் வுஜூதுபாடலை கலீபா Adv. பீர் முஹம்மது ஹக்கியுல்காதிரி, பாடினார்கள்.ஞானப்பாடலை கலீபா உசேன்முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி அவர்கள் பாடினார்கள்.புகழ்பாடலை கலீபா முஹம்மது முஸ்தபா ஹக்கியுல்காதிரி, பாடினார்.
வாழ்த்துரையாக ஹாஜா மொய்தீன் ஹக்கியுல்காதிரி நிகழ்த்தினார்.விழாத்தலைவர் தலைமை உரை நிகழ்த்தினார்.
அதைத் தொடந்து கலிபாக்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
கலீபா ஹபிபுல்லாஹ் ஹக்கியுல்காதிரி,
கலீபா அப்துல்காசிம் ஹக்கியுல்காதிரி,
கலீபா தியாகி சிராஜ்தீன் ஹக்கியுல்காதிரி,
கலீபா முஹம்மது காலீது ஷா ஹக்கியுல்காதிரி,
கலீபா உசேன்முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி,
கலீபா அட்வகேட் லியாகத்அலி ஹக்கியுல்காதிரி,
கலீபா மதுரை உமர் ஹக்கியுல்காதிரி,
மற்றும் தளபதி இராவுத்தர்ஆகியோர் இவ்விழாவில் சிறப்புரையாற்றினார்கள்.
J. ரஹமத்துல்லா ஹக்கியுல்காதிரி நன்றி உரை நல்கினார்.லுஹர் தொழகைக்கு பின் மதிய உணவு வழங்கப்பட்டு இறுதியாக கஸிதத்துல் அஹ்மதிய்யா,கஸிதத்துல் அவ்னிய்யா ஒதி துஆவுடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. பல ஊர்களிலிருந்தும் முரீதுகள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

புனித இராத்திபு நிகழ்ச்சி - 23-09-2010




சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் P.ஹாஜாமுகையதீன் வீட்டில் பிறை 14லில் இராத்திபு நிகழ்ச்சி நடந்தது. செப்டம்பர் மாதம் 23ம் தேதி வியாழக்கிழமை வெள்ளி இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.