வெள்ளி, 25 ஜூன், 2010

சென்னை மாதாந்திர கூட்டம் - 20-06-2010

சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் அவர்கள் வீட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலிபா அட்வகேட் பீர்முகம்மது அவர்கள் தலைமை தாங்கினார்.
முதலவதாக மௌலவி பக்கிர் முகம்மது ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.
அதற்குபின் கலிபா அட்வகேட் பீர்முகம்மது அவர்களால் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.
---------------------------------------------------------------------------------------------------------


கலிபா அட்வகேட் பீர்முகம்மது அவர்கள் குருநாதர் முன்னிலையில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-------------------------------------------------------------------------------------------------------
Dr.இஞ்சினியர் முகையத்தின் அவர்கள் தினமும் நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்,ஓதவேண்டிய துஆக்கள்,தொழகைக்கு பின் ஓதவேண்டிய திக்ருகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------------------------

மௌலவி பக்கிர் முகம்மது ஆலிம் அவர்கள் எனது வழிமுறையும், எனது குடும்பத்தாரையும்,பின்பற்றுங்கள் என்ற நபிகள் நாயகத்தின் (ஸல்) அவர்களின் ஹதீதுபடி வாழ்வது வெற்றியின் இரகசியமாகும் என உரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------------------------------------------------------------------

Dr.குலாம் முகம்மது அவர்கள் அவ்லியாக்களின் அகமியம்,குர்ஆனில் கூறப்பட்ட வலிமார்களின் ஆதாரம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-------------------------------------------------------------------------------------------------------
காஞ்சி முகம்மது யூசுப் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது நாம் வைக்க வேண்டிய முஹப்பத், குருவில் பனா என்ற தலைப்பில் உரையாற்றினார்.
----------------------------------------------------------------------------------------------------


P.கலீல் இப்ராஹீம் அவர்கள் குருநாதரின் ஒவ்வொரு சொல்லும் நம்மையும் சீடர்களையும் சீர்படுத்துவதற்கே என்ற தலைப்பில் உரையாற்றினார்.
---------------------------------------------------------------------------------------------------------

கூட்டத்தில் கலந்து கொண்ட முரீதுகள்




திங்கள், 21 ஜூன், 2010

சங்கைமிகுஇமாம் கலீல் அவுன் மௌலானா இந்திய வருகை















சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மவ்லானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் புனித இந்திய விஜயமாக 14-06-2010 திங்கள்கிழமை காலையில் திருச்சி விமான நிலையத்தில் வருகை புரிந்தார்கள். விமான நிலையத்தில் சங்கைமிகு மௌலானா அவர்களை கலிபாக்களும்,முரீதீன்களும் வரவேற்றனர். பின்னர் சங்கைமிகு மௌலானா அவர்கள் திருச்சி மதரஸாவில் புதிய கட்டிட வளாகத்தை திறந்து வைத்து துஆ செய்தார்கள். பின்னர் முரீதீன்கள்,மதரஸா மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்கள். இறுதியில் மதரஸாவை சுற்றியுள்ள மரக்கன்றுகளை பார்வையிட்டார்கள்.லுஹர் தொழகைக்கு பின் மதிய உணவு வழங்கப்பட்டது.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவு பெற்றது.