வெள்ளி, 18 மார்ச், 2011

முஹிய்யித்தீன் ஆண்டகை (ரலி) அவர்களின் மெளலூது





சங்கை மிகு அப்துல் காதர் ஜீலானி (ரலி) அவர்களின் புனித மாதமான ரபீஉல் ஆகீர் பிறை 11ல் 16-03-2011 அன்று சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக புனித மெளலூது ஓதப்பட்டது.அதில் கலீபா பெருமக்களும் ஆத்ம சகோதரர்களும்,மற்றும் முஹிப்பின்களும் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்கு பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.

சென்னை மாதாந்திர கூட்டம் - 13-03-2011

சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீபா.Adv.பீர் முஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார்.முதலவதாக கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.அதற்குபின் கலீபா.Adv.பீர் முஹம்மது அவர்களால் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.
---------------------------------------------------------------------------------------------

கலிபா Adv.M.பீர் முஹம்மது அவர்கள் வலிமார்கள்,குத்துமார்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

-------------------------------------------------------------------------

S.M.முஸ்தபா அவர்கள் வேதங்களில் உள்ள உயிர் சத்தான ஞான விஷயங்கள்,நல்ல விஷயங்களை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

------------------------------------------------------------


Eng.N.அப்துல் ஜலீல் அவர்கள் முஹிய்யித்தீன் – தீனை உயிர் பித்தவர், முஹிய்யித்தீன் ஆண்டகையின் உயர்வு, உச்ச நிலை என்று உரையாற்றினார்.

----------------------------------------------------------


திவான் அப்துல் காதர் அவர்கள் நமது ஷெய்கு நாயத்தின் சொல்லை, உத்தரவை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று உரையாற்றினார்.

---------------------------------------------------------


முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உடலும்,உயிரும் குருவிலே அழிப்பது சாலச்சிறந்த்து என்று உரையாற்றினார்.

-----------------------------------------------------------


Prof.இப்ராஹிம் கலில் அவர்கள் தினமும் பத்து நிமிடமாவது ஆன்மாவைப்பற்றி,நம்மைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

------------------------------------------------------


O.M.C.ஜெய்லானி அவர்கள் முஹிய்யித்தீன் ஆண்டகையின் பாதம் யாருடைய தோல் மீது உள்ளதோ அவரே வலியுல்லாஹ் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

-------------------------------------------------------------


காதர் மீரா கனி அவர்கள் இறந்து மடிந்து, மருண்டு இருக்கும் உள்ளங்களை ஹயாத்தாக்கவே நாம் அருவாயிருந்து உருவானோம் என்ற நமது ஷெய்கு நாயகத்தின் அமுத மொழிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

------------------------------------------------------------

கலந்து கொண்ட முரீதுகள்


தவ்பா பைத் ஓதி,அஸர் தொழுகையுடன் தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.

செவ்வாய், 8 மார்ச், 2011