வியாழன், 30 செப்டம்பர், 2010

சென்னை மாதாந்திர கூட்டம் - 19-09-2010

சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் ஹாஜா முஹையத்தீன் அவர்கள் வீட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் தலைமை தாங்கினார்.முதலவதாக கலிபா அட்வகேட் பீர்முகம்மது அவர்கள் கிராஅத் ஓதி அதற்குபின் அவர்களால் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.
-----------------------------------------------------------------------------------------------------


தலைமை உரையாக கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் ஷெய்கு நாயகத்தை கரம் பிடித்த நாள் நம் ஆன்மாவிற்கு பிறந்த நாள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
----------------------------------------------------------------------------------------------------
Er.ஹைதர் நிஜாம் அவர்கள் கலிமாவின் உள்ரங்க தாற்பரியத்தை விளங்கியவர் முமீன் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------------------------
Prof.இப்ராஹிம் கலில் அவர்கள் குருவிடம் அனைத்தையும் ஒப்படைப்பது சிறந்தது என்ற தலைப்பில் உரையாற்றினார்.
---------------------------------------------------------------------------------------------------

P.ஹாஜா முஹையத்தீன் அவர்கள் ஹக்கை அறிந்து வணங்குவது சிறந்த வணக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
---------------------------------------------------------------------------------------------------------

அட்வகேட் மீர்ஜாவீது அவர்கள் (மாயை) தோற்றம் – பொய்,(இறை) சக்தி மட்டுமே நிஜம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
----------------------------------------------------------------------------------------------------------
கலிபா அட்வகேட் M.பீர் முஹம்மது அவர்கள் குருவிடம் சரணடைந்தால் ஜெயம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
--------------------------------------------------------------------------------------------------------
கலந்து கொண்ட முரீதுகள்

தவ்பா பைத் ஓதி,அஸர் தொழுகையுடன் தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

லைலத்துல் பத்ரு நிகழ்ச்சி





சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் O.M.C. ஜெய்லானி வீட்டில் பத்ரு ஸஹாபாக்களின் புனித மௌலுதை 28-08-2010 சனிக்கிழமை மாலை அஸருக்கு பின் ஒதப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கலிபாமார்கள் மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித நாளை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது பின் மஃரிப் தொழுகையுடன் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.

வியாழன், 2 செப்டம்பர், 2010

புனித இராத்திபு நிகழ்ச்சி - 24-08-2010






சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் வீட்டில் பிறை 14லில் இராத்திபு நிகழ்ச்சி நடந்தது.ஆகஸ்டு மாதம் 24ம் தேதி செவ்வாய்கிழமை புதன் இரவில் நடந்தது.இந்நிகழ்ச்சிக்கு முன் இப்தார் நிகழ்ச்சி மற்றும் மஹ்ரிப் தொழுகையும் பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபாக்கள் மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.