வெள்ளி, 20 மே, 2011

சங்கைமிகு ஷைகுனா இந்தியா வருகை















ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் ஸ்தாபகரும், கண்மணிநாயகம் ரசூலே கரீம் (ஸல் அலை)அவர்களின் திரு குடும்பத்தினருமான சங்கைமிக்க இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுசேனிய்யுல் ஹாஷிமிய் அவர்கள் ஆன்மீக சுற்றுப் பயணமாக இந்தியாவிற்கு மே மாதம் 19ம் தேதி 2011 வியாழக்கிழமை மதியம் திருச்சி விமான நிலைத்தில் வருகை புரிந்தார்கள்.

விமானநிலையத்தில் சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மெளலானா

அவர்களை மெளலானாமார்களும்,கலிபாக்களும்,முரீதீன்களும் வரவேற்றனர்.

பின்னர் சங்கைமிகு நாயகம் அவர்கள் திருச்சியில் உள்ள நமது மதரஸாவிற்கு வருகை புரிந்தார்கள்.

மதரஸாவில் புதிதாக ஆரம்பிக்கபட்டுள்ள அவ்னிய்யா கம்யூட்டர் மையத்தை பார்வையிட்டார்கள்.

பின்னர் சங்கைமிகு நாயகம் அவர்கள் நமது மதரஸாவில் முரீதீன்கள்,மதரஸா மாணவர்கள்,

மதரஸா ஆசிரியர்கள் முன்னிலையில் உரையாற்றி அருளாசி வழங்கினார்கள்.

இப்புனித நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.




புனித இராத்திபு நிகழ்ச்சி



சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் Er.ஹைதர் நிஜாம் ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1432 ஜமாத்துல் ஆகிர் மாதம் பிறை 13ல் இராத்திபு நிகழ்ச்சி நடந்தது.மே மாதம் 17ம் தேதி செவ்வாய்கிழமை இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.

சென்னை மாதாந்திர கூட்டம் - 15-05-2011

சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் நவம்பர் மே 15ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் தலைமை தாங்கினார்.

-----------------------------------------------------------------------------
மௌலவி பக்கிர் முகம்மது ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.
-----------------------------------------------------------------------------------------

கலிபா Adv.A.அப்துல் ரவூப் அவர்கள் குருவில் பனா,இரசூலில் பனா,ஹக்கில் பனா என்ற தலைப்பில் உரையாற்றினார்.

-----------------------------------------------------------------------------------------

Er.N.அப்துல் ஜலில் அவர்கள் தன்னை அறிவது முதன்மை,நூரே முஹம்மதிய்யா என்ற தலைப்பில் உரையாற்றினார்.

-------------------------------------------------------------------------------------------

செய்யது அப்துல் மஜீது அவர்கள் ஒரு பாடல் பாடினார்

---------------------------------------------------------------------------------------------

திவான் அப்துல் காதர் அவர்கள் பையத் வாங்குவதற்கு முன் நாம் எப்படியிருநதோம் தற்போது எப்படி விளக்கத்துடன் உள்ளோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

---------------------------------------------------------------------------------------

முஹம்மது மஹாதிர் அவர்கள் ஆன்மீக குரு ஒவ்வோரு மனிதனின் வாழ்விலும் மிக அவசியம் என்று உரையாற்றினார்.

------------------------------------------------------------------------------------------------

Er.ஹைதர் நிஜாம் அவர்கள் நாகூர் ஆண்டகையின் உயர்வு பற்றி உரையாற்றினார்.

----------------------------------------------------------------------------------------

Adv.மீர் ஜவ்வாது அவர்கள் தொழுகை என்பது சிர்க் என்ற அசுத்தம் நீக்கி தொழுதல்,வஹ்தத்துல் வுஜீது என்ற தலைப்பில் உரையாற்றினார்.

-----------------------------------------------------------------------------------------------
கலந்து கொண்ட முரீதுகள்


தவ்பா பைத் ஓதி,அஸர் தொழுகையுடன் தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.