வெள்ளி, 31 அக்டோபர், 2014

மாதாதிந்திர கூட்டம் - 26-10-14

சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் மாதாதிந்திர கூட்டம் 26-10-2014 அன்று நடைபெற்றது.கூட்டத்தின் ஆரம்பமாக Adv.மீர் ஜவ்வாது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கிராஅத் ஒதினார் அதற்க்குப்பிறகு S.B.ஆசிப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஏகாந்த பாடல் பாடினார் P.ஹாஜா முஹையத்தீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கர்பலா யுத்தம் ஜனநாயகத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையே ஏற்பட்ட போர்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.A.முஹம்மது ஜூபைர் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தன்னை அறிவது தான் ஞானம் என்று உரை நிகழ்த்தினார்.
திவான் அப்துல் காதிரி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தியாகம் என்பது நம்மில் அசையாத அன்பும் நம்மில் உங்களை அழித்தலே தியாகம் –ஷெய்கு நாயகத்தின் பொன் மொழிகள் என்று உரை நிகழ்த்தினார்
S.H.பசீர் அஹமது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நாம் முதலில் நம்மையே திருத்திக் கொள்ள வேண்டும் என்று உரை நிகழ்த்தினார்.
Adv.மீர் ஜாவ்வாது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ரஸூல் (ஸல்) சொன்னவை அனைத்தும் முற்றிலும் உண்மை நன்மை என்று உரை நிகழ்த்தினார்

இறுதியாக தவ்பா பைத் ஒதி அஸர் தொழுகையுடன் தப்ருக் உடன் இனிதே நிறைவுற்றது.






புனித இராத்திபு நிகழ்ச்சி


சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் ஹாஜா முஹைத்தீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1435 துல்ஹஜ் மாதம் பிறை 14ல் (அக்டோபர் மாதம் 09ம் தேதி வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு)மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா ஒதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது

மாதாதிந்திர கூட்டம்-30-09-2014



சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் சார்பில் மாதாதிந்திர கூட்டம் 30-09-2014 அன்று நடைபெற்றது. .கூட்டத்தின் ஆரம்பமாக கிராஅத் ஒதி அதற்க்குப்பின் ஏகாந்த பாடல் பாடபட்டது. P.ஹாஜா முஹையத்தீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நற்செயல்கள் வணக்கமாக மாற்றப்படுகிறது என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அப்துல் பாசித் ஹக்கிய்யுல் காதிரி  அவர்கள் இஸ்லாத்தின் உயர்வானது ஞானம்தான் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ஜீலானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் குருவுக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும் அதுவே மிகவும் நல்லது என்று உரை நிகழ்த்தினார்.
குலாம் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நமது உடலே ஒரு பிரபஞ்சமே அனைத்து அம்சங்களும் உடலிலே அடங்கியுள்ளது என்று உரை நிகழ்த்தினார்
ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் குர்பானி என்பது குருவிலே முழுமையாக பனா ஆவது ஆகும் என்று உரை நிகழ்த்தினார்
இறுதியாக தவ்பா பைத் ஒதி அஸர் தொழுகையுடன் தப்ருக் உடன் இனிதே நிறைவுற்றது.