புதன், 28 ஜூலை, 2010

சங்கைமிகுஇமாம் கலீல் அவுன் மௌலானா திருமுல்லைவாசல் விஜயம்


சங்கைமிகுஇமாம் கலீல் அவுன் மௌலானா திருமுல்லைவாசல் விஜயம்
---------------------------------------------------------------------------------------------------------
குத்துபுல் திலகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஷூசைனிய்யுல் ஹாஷிமிய்(ரலி) அவர்களின் புனித தர்காவில் சங்கைமிகுஇமாம் கலீல் அவுன் மௌலானா அவர்களின் ஜியாரத் நிகழ்ச்சி
----------------------------------------------------------------------------------------------
குத்துபுல் திலகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஷூசைனிய்யுல் ஹாஷிமிய்(ரலி) அவர்களின் புனித தர்காவில் சங்கைமிகுஇமாம் கலீல் அவுன் மௌலானா அவர்களின் மஜ்லீஸ் நிகழ்ச்சி
-----------------------------------------------------------------------------------------------------




சங்கைமிகு சைய்யது மஸ்ஊது மெளலானா அல்ஹாதி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற புனித இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் சங்கைமிகுஇமாம் கலீல் அவுன் மௌலானா அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.இவ்விழாவில் கலிபாகள் மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள்.

புனித ஷபேபராஅத்-27-07-2010




சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஷபேபராஅத் நிகழ்ச்சி கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் வீட்டில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மஹ்ரிப் தொழுகைக்குபின் மூன்று யாசீன் சூராக்கள் ஓதப்பட்டு துவாவுடன் இனிதே நிகழ்ச்சி நிறைவுப் பெற்றது.இந் நிகழ்ச்சிக்கு கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சிக்குபின் தப்ருக் வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.

திங்கள், 26 ஜூலை, 2010

புனித இராத்திபு நிகழ்ச்சி -25-07-2010




சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் S.M. முஸ்தபா அவர்கள் வீட்டில் பிறை 14லில் இராத்திபு நிகழ்ச்சி நடந்தது. ஜூலை மாதம் 25ம் தேதி ஞாயற்றுக்கிழமை திங்கள் இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.

ஞாயிறு, 25 ஜூலை, 2010

சென்னை மாதாந்திர கூட்டம் -18-07-2010

சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் வீட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலிபா அட்வகேட் பீர்முகம்மது அவர்கள் தலைமை தாங்கினார்.முதலவதாக மௌலவி பக்கிர் முகம்மது ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.அதற்குபின் சுபுஹானி அவர்களால் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.
--------------------------------------------------------------------------------------------------------
கலிபா அட்வகேட் பீர்முகம்மது அவர்கள் கூட்டத்தின் முக்கியம்,மகத்துவம்,அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

------------------------------------------------------------------------------------------------------

அப்துல் ஜலீல் அவர்கள் நூரே முஹம்மதிய்யா,குருவின் முன் ஒரு சிஷ்ஷியன் எவ்வாறு இருக்க வேண்டும்,உடல் பொருள் ஆவி அனைத்தும் அர்பணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
---------------------------------------------------------------------------------------------------
அட்வகேட் மீர் ஜவ்வாது அவர்கள் மனதில் உள்ள அழுக்குகளை நீக்குவது,மிஃராஜ்-கலிமா விளக்கம்,கலிமாவின் தாற்பரியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------------------------------
ஜீலானி அவர்கள் யார் உண்மையான விசுவாசி,தீட்ஷையின் முக்கியத்துவம்,சந்தேகமோ-கோபமோ ஏற்பட்டால் தீட்ஷை முறிந்து விடும் யாரும் நம்மை காப்பாற்ற முடியாது என்ற கருத்துடன் உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------------------

அப்துல் பாசித் அவர்கள் இரவு-உடல்,மிஃராஜ் இரவு, ஜிஹாதுல் அக்பர்,ஹவா என்ற மனம், பேராசை-ஷைத்தான் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
---------------------------------------------------------------------------------------------------

ஹாஜா முஹையத்தீன் அவர்கள் மனதை ஒருநிலைப்படுத்துதல்,ஷிர்கு நீக்குதல்,முக்தி பெற வழி,அனைத்தையும் குருவிலே காண வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
----------------------------------------------------------------------------------------------

கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் படைப்பின் நோக்கம், இறை தரிசனம்-சுயதரிசனம்,சூபிஸம்,நப்ஸை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-------------------------------------------------------------------------------------------------------------

கலந்து கொண்ட முரீதுகள் ஒரு பகுதி

தவ்பா பைத் ஓதி,அஸர் தொழுகையுடன் தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.

வெள்ளி, 9 ஜூலை, 2010

புனித இராத்திபு நிகழ்ச்சி - 27-06-2010



சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் முஸத்திக் வீட்டில் பிறை 14லில் இராத்திபு நிகழ்ச்சி நடந்தது. ஜுன் மாதம் 27ம் தேதி ஞாயற்றுக்கிழமை திங்கள் இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள். இந் நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.