வியாழன், 2 மே, 2013

மாதாந்திர கூட்டம் -21-04-2013


சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பில் ஏப்ரல் மாதம் 21அம் தேதி கூட்டம் நடைபெற்றது.கிராஅத் மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஒத ஏகாந்த பாடல் ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் பாடினார்.

தலைமை உரையாக கலீபா Adv.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் 
நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகத்தின் பிறப்பு,கராமத்துக்கள் என்ற
தலைப்பிலும்,விடாமுயற்சி வெற்றி நிச்சயம் என்ற தலைப்பிலும் 
உரையாற்றினார்.

அப்துல் பாசித் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ரசூலை உகப்பது 
பிரபஞ்சத்தையே உகப்பதாகும்,பிரபஞ்ச சுழற்சியே ரசூலியத்தில் உள்ளது 
என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Er.ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ரசூலுள்ளாஹ் காலத்தில் 
ஷகாபாக்கள் எவ்வாறு ஈர்க்கப்பட்டார்கள் அதேபோல் நமது ஷெய்கு 
நாயகத்திடம் முரீதுகள் ஈர்க்கப்படுகிறார்கள் என்ற தலைப்பில் 
உரையாற்றினார்.

Er.அப்துல் ஜலீல் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நமது ஷெய்கு நாயகத்தின் பொன் 
மொழிகள்: வாழக்கூடிய வலிமார்கள் அதிகமானோர் நமது முரீது பிள்ளைகள்,
இந்த ஸமானில் நம்மை அண்டியோர் பெரும்பேறு பெற்றவர்கள் என்ற 
தலைப்பில் உரையாற்றினார்.

ஹாஜா முகையதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கலிமாவை 
பரப்புவதற்காகவே நாம் இந்தியா வருகிறோம் அதாவது ஞானத்தை 
பரிபூரணமாக விளக்குவதற்காகவே நாம் வருகிறோம் என்ற 
உரையாற்றினார்.



தவ்பா பைத் ஒதி அஸர் தொழுகைக்கு பின் துஆவுடன் தப்ருக் வழங்கி கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக