வியாழன், 29 ஆகஸ்ட், 2013

மாதாந்திர கூட்டம் -18-08-2013

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பில் ஆகஸ்ட் மாதம் 18அம் தேதி கூட்டம் நடைபெற்றது.கிராஅத் அப்துல் ஜலீல் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஒத ஏகாந்த பாடல் சுபுஹானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் பாடினார்.

தலைமை உரையாக ஹாஜா முகையத்தீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தானும் சர்வமும் ஒன்று என்ற ஞானக் கருத்தை நிலை நிறுத்தி அதனை பரப்பி,மக்கள் அனைவரும் பயன் பெறவே ஞான மகான்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அப்துல் ஜலீல் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நாயகம் (ஸல்) அலைவஹிவஸ்ஸிம் அவர்கள் இல்லையானால் எவ்வாறு நாம் இறைவனை அறிந்திருக்க முடியாதோ,அவ்வாறே நமது ஷெய்கு நாயகம் இல்லையானால் ஞானம் நமக்கு கிடைத்திருக்காது என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அப்துல் பாசித் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தினமும் ஒருமுறையாவது ஸலவாத் சொல்லுங்கள் என ஷெய்கு நாயகம் கூறுகிறார்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மீர்ஜவ்வாது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தன்னை அறிவதே-ஞானம், சூபிஸம்- இன்பம்,துன்பம் இரண்டையும் சலனமற்ற நிலையில் மனே நிலையை ஒரு நிலைப்படுத்தும் அனுபவ பயிற்சியாகும் என்று உரையாற்றினார்.
இப்ராஹிம் கலில் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தாயாகவும்,தந்தையாகவும் நமது ஷெய்கு நாயகம் வழிகாட்டி நமது தேவையாணதை நாம் கேட்காமலே தருகிறார்கள் என்று உரையாற்றினார்.
சலாவுதீன ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நமது ஷெய்கு நாயகத்தில் சொல் அப்படியே நடக்கும் என்பதற்கு என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளே உதாராணமாகும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
ஜீலானி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் உங்கள் உடலிலும் தன்மையிலும் எண்ணத்திலும் நப்ஸிலும் அல்லாஹ் இருக்கிறான் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தஃபா பைத் ஒதி அஸர் தொழுகைக்குப்பின் துஆ ஒதி தப்ருக் வழங்கி கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக