ஞாயிறு, 25 ஜூலை, 2010

சென்னை மாதாந்திர கூட்டம் -18-07-2010

சென்னை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் மூலம் மாதாந்திர கூட்டம் கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் வீட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கலிபா அட்வகேட் பீர்முகம்மது அவர்கள் தலைமை தாங்கினார்.முதலவதாக மௌலவி பக்கிர் முகம்மது ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.அதற்குபின் சுபுஹானி அவர்களால் ஏகாந்த பாடல்கள் பாடப்பட்டது.
--------------------------------------------------------------------------------------------------------
கலிபா அட்வகேட் பீர்முகம்மது அவர்கள் கூட்டத்தின் முக்கியம்,மகத்துவம்,அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

------------------------------------------------------------------------------------------------------

அப்துல் ஜலீல் அவர்கள் நூரே முஹம்மதிய்யா,குருவின் முன் ஒரு சிஷ்ஷியன் எவ்வாறு இருக்க வேண்டும்,உடல் பொருள் ஆவி அனைத்தும் அர்பணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
---------------------------------------------------------------------------------------------------
அட்வகேட் மீர் ஜவ்வாது அவர்கள் மனதில் உள்ள அழுக்குகளை நீக்குவது,மிஃராஜ்-கலிமா விளக்கம்,கலிமாவின் தாற்பரியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------------------------------
ஜீலானி அவர்கள் யார் உண்மையான விசுவாசி,தீட்ஷையின் முக்கியத்துவம்,சந்தேகமோ-கோபமோ ஏற்பட்டால் தீட்ஷை முறிந்து விடும் யாரும் நம்மை காப்பாற்ற முடியாது என்ற கருத்துடன் உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------------------------------------

அப்துல் பாசித் அவர்கள் இரவு-உடல்,மிஃராஜ் இரவு, ஜிஹாதுல் அக்பர்,ஹவா என்ற மனம், பேராசை-ஷைத்தான் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
---------------------------------------------------------------------------------------------------

ஹாஜா முஹையத்தீன் அவர்கள் மனதை ஒருநிலைப்படுத்துதல்,ஷிர்கு நீக்குதல்,முக்தி பெற வழி,அனைத்தையும் குருவிலே காண வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
----------------------------------------------------------------------------------------------

கலீஃபா அட்வகேட் அப்துல்ரஃவூப் அவர்கள் படைப்பின் நோக்கம், இறை தரிசனம்-சுயதரிசனம்,சூபிஸம்,நப்ஸை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-------------------------------------------------------------------------------------------------------------

கலந்து கொண்ட முரீதுகள் ஒரு பகுதி

தவ்பா பைத் ஓதி,அஸர் தொழுகையுடன் தப்ருக் வழங்கி இனிதே கூட்டம் நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக